Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு ரூ. 1 லட்சம் நிவாரண நிதி அளித்த சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர் சங்கம்…

சிவகங்கை

கேரள மாநில அரசுக்கு நிவாரண நிதி ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித்திடம் வழங்கிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள்.

சிவகங்கை: நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில அரசுக்கு சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திரட்டப்பட்ட நிதி  ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள்  வழங்கினர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில்  நிலச்சரிவு மற்றும் இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட  கேரள மக்களுக்கு உதவிடும் வகையில் திரட்டப்பட்ட நிவாரண நிதி ரூ.1,00,000- ஐ முதற் கட்டமாக, மாவட்ட ஆட்சியர் ஆஷாஆஜித்திடம் நிர்வாகிகள் வழங்கினர்.

சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்

இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் மாரி, மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக், மாவட்ட இணைச் செயலாளர்கள் கிருஷ்ணகுமார், பயாஸ் அகமது, சின்னப்பன், ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகி பாஸ்கரன், கலைச்செல்வம், பொதுப்பணித்துறை நிர்வாகிகள் ஆனந்த நாகராஜன், கலைச்செல்வி, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகிகள் சிவக்குமார், முத்தையா, நடராஜன், மாவட்ட, வட்டக்கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top