உத்தர்கண்ட் மாநிலம் கனிஷ்பூரில் நடைபெற்ற Triathle ( Running, Swimming, Shooting ) போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின்
மாணவி சந்தோஷிகா தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தினார்.
அவரது சகோதரர்கள் தனுஷ் கிருஷ்ணன் ,நிஷாந்த் கிருஷ்ணன் இருவரும் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்து மூவரும் எகிப்து நாட்டில் நடைபெற உள்ள உலகளாவிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருக்கிறார்கள்.
சாதனைச் செல்வங்களை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தியின் தலைமையில் ஆசிரியர்களும், மாணவர்களும் திரளாகக் கூடி மாலை அணிவித்து வரவேற்று ஆரத்தி எடுத்து பரிசுகளை வழங்கினர்.
மாணவர்களின் பெற்றோர்கள் மணி, கார்த்திகா ஆகியோர் பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், மேலூருக்கு அருகில் உள்ள அம்மன்பேட்டை என்கிற குக்கிராமத்தில் பிறந்த பிள்ளைகள் தங்கள் தனித்திறமையால், விடாமுயற்சியால் உலகத்தைச் சுற்றி வருகிற பேராற்றலைப் பெற்றிருக்கிறார்கள்.
சந்தோஷிகாவுக்கு விருது வழங்கிய உத்தர்கண்ட் மாநில விளையாட்டு துறை செயலாளர் அனில் குமார் சின்கா.விருது பெற்ற குழந்தை நாளை ஒலிம்பிக்கில் இடம் பெறுவார் என்று வாழ்த்தியிருக்கிறார்.