மதுரை:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா,
தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் 503 பேர் பல்வேறு கோரிக்கை மனுக்களாக வழங்கினர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரை செய்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோவின்) மூலமாக CM-ARISE திட்டத்தின் கீழ் சுமை வாகனம் வாங்க தாட்கோ மானியம் ரூ.3,47,221/- ஒரு பயனாளிக்கும், PM-AIJAY திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பிற்கு தாட்கோ மானியம் ரூ.50,000/- வீதம் 5 – பயனாளிகளுக்கும்,
நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் கீழ் தாட்கோ மானியம் ரூ.5,00,000/- வீதம் 3-பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.59,28,060/- மொத்த திட்ட தொகையில் தாட்கோ மானியம் ரூ.20,97,221/- மதிப்பிலான ஆணைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், தாட்கோ மாவட்ட மேலாளர் பெ.பாலசுப்ரமணியன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




