திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ஜனவரி மாதம் மொத்தம் ரூ. 3.98 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவில், அஷ்டலிங்க கோவில்கள், திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
ரூ. 3.98 கோடி ரொக்கம்.
மாதம்தோறும் அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகளில் உள்ள உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
அப்போது, கோயில் உண்டியலில் 3 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரத்து 797 யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 112 கிராம் தங்கம், 1.960 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் ரூ. 52 லட்சத்து 54 ஆயிரம் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
ஜனவரி மாத உண்டியல் காணிக்கை மொத்தம் ரூ. 3 கோடியே 98 லட்சத்து 6 ஆயிரத்து 221 என கணக்கிடப்பட்டு, வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஜீவானந்தம், இணை ஆணையா் ஜோதி ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.