Close
மார்ச் 11, 2025 3:50 காலை

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்: தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த நூக்காம்பாடி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் ராமஜெயம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ராஜா, அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசியதாவது:

இந்த கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மக்களை நோய் நொடி இல்லாமல் பாதுகாப்பதற்கும் மக்களுக்கு நோய் வருவதற்கு முன்பே பாதுகாத்து அவர்களின் உடல்நிலை சரி பார்ப்பதற்கும் இந்த கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் மக்கள் நீங்கள் பங்கேற்று தங்களின் உடல்நிலை பாதுகாத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் இரத்தத்தில் இரும்பு சத்து அளவு, கொழுப்பின் அளவு கண்டறிதல், இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள உப்பு மற்றும் சர்க்கரை அளவு கண்டறிதல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள், கண்புரை கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், சித்தர் மருத்துவப் பிரிவு மூலம் குழந்தைகள் மருத்துவம் மகப்பேறு மருத்துவம் பொது மருத்துவம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதேபோல் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் மற்றும் இசிஜி எடுக்க தேவையான அனைத்து வசதிகளையும் உங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் ஸ்கேன் இசிஜி எடுத்து பரிசோதனைசெய்து கொள்ளலாம்.

எத்தனை அத்தியாவசிய வசதிகளை தமிழக மக்களுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அதை என்றும் மறவாமல் முதலமைச்சருக்கு உறுதுணையாக இருங்கள் என்று கூறி கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் உஷாராணி சதாசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் அப்பாசாமி, மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், கிருஷ்ணாமூர்த்தி , மருத்துவர் பிரகாஷ், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top