திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி கண்ணமங்கலம் பேரூராட்சியில் ரூபாய் ஒரு கோடியே 64 லட்சத்தில் நவீன எரிவாயு தகனமேடைக்கான பூமி பூஜையை தொடர்ந்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான தரணிவேந்தன் முதல் செங்கல்லை எடுத்து கொடுத்து பணியினை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர்,தட்சிணாமூர்த்தி, ஆரணி நகர மன்ற தலைவர் மணி, ஒன்றிய செயலாளர் ,சுந்தரதுரைசாமி, பேரூர் நகர மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், திமுக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தண்ணீா் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது. திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அணியின் மாவட்ட அமைப்பாளர் இப்ராகிம்ஷெரீப் தலைமை வகித்தார்.
ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தண்ணீா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிா்பானங்கள் மற்றும் பழ வகைகளை வழங்கினாா்.
கண்ணமங்கலம்
இதேபோல, கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கூட்டுச் சாலையில் திமுக சுற்றுசூழல் அணி சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது. தொகுதி மக்களவை உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழ வகைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அணியின் மாவட்ட துணை அமைப்பாளா் மாதவன், முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் மணி, தொகுதி திமுக பொறுப்பாளா் அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, சுந்தா், மோகன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் மாலிக்பாஷா, அப்சல்பாஷா, பாலா, சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.