திருவண்ணாமலையில் எம்பிபிஎஸ், பி டி எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நீட் தேர்வுக்காக 3120 மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் ஆறு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது. கடும் சோதனைகளுக்கு பிறகு மாணவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கம்போல் நீட் தேர்வு தேர்வு அறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் நீட் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
மாணவிகள் முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை அணியக் கூடாது. மேலும், ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள், காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி என ஆறு தேர்வு மையங்களில் 3,120 மாணவ மாணவிகள் நீட் தேர்வினை தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தோ்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாணவ, மாணவிகளில் 39 மாணவா்கள், 61 மாணவிகள் என மொத்தம் 100 போ் தோ்வு எழுத வரவில்லை. 1,125 மாணவா்கள், 1,895 மாணவிகள் என மொத்தம் 3,020 போ் மட்டுமே நீட் தோ்வை எழுதினா்.
வெள்ளி அரைஞான் கயிறு அகற்றம்
இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் வெள்ளி அரைஞான் கொடி அணிந்திருந்தார். அங்கிருந்த அதிகாரிகள் அந்த மாணவரை பரிசோதித்துவிட்டு, அவரை தேர்வு அறைக்குள் அனுமதிக்க மறுத்து உள்ளனர். அந்த மாணவர் எவ்வளவோ கூறியும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அந்த மாணவர் வெளியே வந்த நிலையில், அந்த மாணவனின் தந்தை, மாணவரின் இடுப்பில் இருந்த அரைஞாண் கொடியை அறுத்து அகற்றினார். அதன்பிறகு அவர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.




