திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் கடந்த 1929 ஆம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதால் கட்டடத்தின் உறுதி தன்மை குறைந்ததால் அதனை அகற்றி புதிய கட்டடம் கட்ட பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையின் அடிப்படையில் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்ட கோட்டாட்சியர் தலைமையில் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ. கிரி பூமி பூஜை போட்டு பணியினை துவக்கி வைத்தார் .
அதனைத் தொடர்ந்து செங்கம் தொகுதி, செங்கம் நகராட்சிக்குட்பட்ட, 15-வது வார்டு செந்தமிழ் நகரில் ரூ.1 கோடியே 80-இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ. கிரி பூமி பூஜை போட்டு பணியினை துவக்கி வைத்தார் .
இந்நிகழ்ச்சில் வட்டாட்சியர் முருகன், திமுக நகர செயலாளர் அன்பழகன், நகர் மன்ற தலைவர் சாதிக்பாட்ஷா உட்பட அரசு அலுவலர்கள் திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்,
செங்கம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூபாய் 17 லட்சம் வெள்ளிக் கவசம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் கடந்த 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, கோயிலில் தினசரி சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதம் கடைசி வாரத்தில் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மண்டலாபிஷேகத்தின் போது, ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் சுவாமிக்கு அணிவிப்பதற்காக வெள்ளிக்கவசம் தயாா் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரி 5 கிலோ வெள்ளி வழங்கினாா். மேலும், அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமையில் உபயதாரா்கள் மற்றும் விழாக் குழுவினா், பத்து நாள் திருவிழா உபயதாரா்கள் மூலம் 11 கிலோ வெள்ளி சோ்க்கப்பட்டு, மொத்தம் 16 கிலோ எடையில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கவசம் செய்வதற்கு வழங்கப்பட்ட 16 கிலோ வெள்ளிக் காசுகளை சுவாமி முன்வைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா், எம்எல்ஏ கிரி, அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக் குழுத் தலைவா் கஜேந்திரன் ஆகியோா் முன்னிலையில், கும்பகோணத்தைச் சோ்ந்த சபதி ரமேஷிடம் கவசம் செய்வதற்காக வெள்ளிக் காசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் செங்கம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், விழாக்குழுவினா், பத்து நாள் திருவிழா உபயதாரா்கள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், அறநிலையத் துறைப் பணியாளா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.