திருவண்ணாமலை மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக பின்வரும் தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
குழந்தை நலக் குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். மற்றும் இப்பதவி அரசு பணியல்ல விண்ணப்பதாரர் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் இருந்து குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
மேலும் பத்திரிகையில் செய்தி வெளியிடும் நாளில் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை நல குழுவின் தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ நியமனம் செய்யப்படமாட்டாது.
இதற்கான விண்ணப்படிவத்தை அந்தத்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரி https. dsdcpimmstapovin யிலிருந்து விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 13.06.2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் பின் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
குழந்தை நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பம் தனித்தனியாக அனுப்பப்பட வேண்டும். இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை சென்னை- 600010 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது.
மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வட்டாட்சியார் அலுவலக வளாகம் பெரியார் சிலை அருகில் திருவண்ணாமலை 600001 தொலைபேசி எண்: 04175223000, அலைபேசி எண் 6382041436 382014197 என்ற எண்ணைதொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.