விழுப்புரம் அருகே சென்னைக்கு குடிநீர் செல்லும் வீராணம் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது இந்த குழாய் மூலம் தினம்தோறும் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் செல்கிறது,
இந்நிலையில் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி- கும்பகோணம் சாலையில் பஞ்சமாதேவி என்ற இடத்தில் வீராணம் பைப்பில் திடீரென ஓட்டை ஏற்பட்டு நீர் பீறிட்டுக் கொண்டு 50 அடி தூரத்திற்கு மேல் தொடர்ந்து வெளியேறி வருகிறது
இதனை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர், மேலும் இந்த தண்ணீர் வெளியேறி வருவதால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி வருகிறது.