Close
ஜூன் 6, 2025 6:01 மணி

அரசு பள்ளியில் விலையில்லா புத்தகங்களை வழங்கிய துணை சபாநாயகர்

மாணவியர்களுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்கிய துணை சபாநாயகர்

தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரணங்களை  மாணவியர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரணங்களை வழங்கிப் பேசியதாவது:

மாணவியர்களுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை, நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்றைய தினம் 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லாபாடபுத்தகங்கள் வழங்குகின்ற நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியானது கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு தேர்வில் 96.98 சதவீதமும், 11 ஆம் வகுப்பில் 98.3 சதவீதமும், 12 ஆம் வகுப்பில் 98.8 சதவீதமும் மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவியர்களுக்கும் சிறப்பாக பணியாற்றிய தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கும் வாழ்த்துக்களைதெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுப்பணித்துறை, துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் சென்ற ஆண்டு தேர்ச்சி சதவிகித்தை காட்டிலும் அதிகமாக தேர்ச்சி பெற வேண்டும் என்று கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தி நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக திருவண்ணாமலை  மாவட்டம் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவிகிதத்தில் முன்னேறிய மாவட்டமாக திகழ்ந்துள்ளது.

தமிழக அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் உயா்கல்வி கற்க வெளியூா்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இப்போது மாணவ-மாணவிகள் அவா்களது மாவட்டத்திலேயே மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளையும்  படிக்கும்  நிலை உள்ளது. இவற்றையெல்லாம் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) காளிதாஸ், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top