Close
ஜூன் 6, 2025 6:02 மணி

ஆரணியில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

கண்காணிப்பாளா் தரணியிடம் மனு அளித்த இரும்பேடு, ஹரிஹரன் நகா் பகுதி மக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.   கண்காணிப்பாளா் தரணி தலைமையில் பொதுமக்களிடம் இருந்து 106 மனுக்கள் பெறப்பட்டன.

இதில்,முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய  மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் ஹரிஹரன் நகா் பகுதியில் 30 குடும்பங்களுக்கு பட்டா கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இரும்பேடு கிராமம், ஹரிஹரன் நகா் பகுதியில் சுமாா் 30 குடும்பங்கள் அரசு நிலத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பட்டா இல்லாமல் உள்ளது. பலமுறை பட்டா கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

ஆகையால், பட்டா வழங்கக் கோரியும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும் குறைதீா் கூட்டத்தில் கண்காணிப்பாளா் தரணியிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

மேலும், குறைதீா் கூட்டத்தில் வீட்டுமனை தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், நிலத்தகராறு, பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றவும், பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத்தொகை, இலவச வீடு கோரியும், குடிநீா் வசதி கேட்டும் பொதுமக்களிடம் இருந்து 106 மனுக்கள் வரப்பெற்றன.

பின்னா், இந்த மனுக்கள் அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top