தென்காசி மாவட்டம் கடையம் அருகில் மலை மேல் உள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமாகும்.
இங்கு இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து உற்சவர் முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மேலும் மலை அடிவாரத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உகந்த மரங்கள் வைக்கப்பட்டுள்ளது அந்த மரங்களுக்கு கோவிலுக்கு வருகை தந்த பெண்கள் மலர் தூவி சிறப்பு வழிபாடு செய்தனர்.
வைகாசி விசாக சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.




