Close
ஜூன் 15, 2025 6:00 மணி

ஏடிஎம் கொள்ளையர்களை 24- மணி நேரத்தில் பிடித்த விழுப்புரம் காவல்துறையினர்

விழுப்புரத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடித்து தப்பி சென்ற வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பெங்களூர் சென்று கைது செய்த விழுப்புரம் காவல்துறையினருக்கு  பாராட்டு குவிந்து வருகின்றன.

விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியார்மில் மற்றும் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி. ரோடு, மாம்பழப்பட்டு ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 12.06.2025 வியாழக்கிழமை அன்று இரவு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பகுதியில் அலுமினிய தகடு வைத்து நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கொள்ளையடித்து தப்பி சென்ற நபர்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பசரவணன் உத்தரவின் பேரில் விழுப்புரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் சித்ரா காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் தனலியோசார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையிலான மூன்று தனிப்படையினர் அமைக்கப்பட்டது.

அவர்கள் சம்பவம் இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து அவர்கள் செல்லும் வழிதடத்தை கண்டறிந்து அதிவிரைவாக பின்தொடர்ந்து சென்று அவர்களை அடையாளம் கண்டனர்.

பெங்களூருவிலிருந்து வடமாநிலத்திற்கு தப்பி செல்லமுயன்ற உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த  சோனு-வயது- 23,  சஞ்சய்குமார்-வயது-33, சிவா-27, லவ்குஷ், ஆகியோர்களை பெங்களூரில் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் செல்போன்கள் 4 மற்றும் ஏடிஎம்-4-கார்டுகள் கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த சோனு தலைமையிலான இவர்கள் விமானம் மூலம் சென்னை வந்து திருவல்லிகேணி பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்துள்ளனர்.

இணையதளம் மூலம் நான்கு சக்கரவாகனத்தை வாடகைக்கு எடுத்து வந்து விழுப்புரம் நகரத்தில் ரெட்டியார்மில், எம்.ஜி. ரோடு மற்றும் மாம்பழப்பட்டு ரோடு பகுதிகளில் உள்ள ஏடிஎம்-ல் அலுமினிய தகடு வைத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்னை சென்று அங்கிருந்து பெங்களூருக்கு ரயிலில் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இவர்கள் மீது பெங்களூர் மற்றும் உத்திரபிரதேசத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

24 மணி நேரத்தில் ஏடிஎம் கொள்ளையர்களை விரைவாக கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். மக்கள் மத்தியில் காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top