நிா்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
பாமகவின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசு தடையாக உள்ளது.
நிா்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். விவசாயிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த திமுக அரசுக்கு 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் விவசாயிகள் பாடம் புகட்ட வேண்டும். தி ரு வண்ணாமலை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும், நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,தென்பெண்ணை செய்யாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,
திருவண்ணாமலை – திண்டிவனம், திண்டிவனம் – நகரி புதிய ரயில் பாதை திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய அன்புமணி ராமதாஸ்
எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி மு.க.ஸ்டாலின் போன்ற எந்த முதலமைச்சர் ஆட்சிக்கு வந்தாலும் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. பாமக ஆட்சிக்கு வந்தால் நந்தன் கால்வாய் திட்டத்தை 6 மாதங்களில் நிறைவேற்றுவோம். செய்யாறு, மேல்மா பகுதியில் சிப்காட் தேவை இல்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க வேண்டும். விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது.
கா்நாடகம், தெலங்கானா, கா்நாடகம், பிகாா், ஒடிஸா மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் நடத்த அதிகாரம் இல்லை என்று சொல்கிறாா்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வன்னியர் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 44 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் இன மக்களுக்கோ, பட்டியல் இன மக்களுக்கோ, தமிழ்நாடு அரசு எதுவும் செய்யவில்லை. வன்னிய சமுதாயத்தை இரண்டாக பிரிப்பதில் கில்லாடிகள் தி.மு.க காரர்கள் என்றும் இந்த சூழ்ச்சியை தற்போது தி.மு.க; பா.ம.க-வில் செய்து வருகிறது, அது விரைவில் முறியடிக்கப்படும்.
பாமகவின் ஒரே எதிரி திமுக தான் . திருவண்ணாமலை கிரிவலத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதாகவும் அவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட அமைச்சரும் செய்து தரவில்லை என குற்றஞ்சாட்டினார்.
தமிழ்நாட்டு மக்களின் மொத்த உரிமைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மக்களின் உரிமை மீட்பு பயணம் வருகின்ற ஜூலை 25ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், மக்களின் அனைத்து உரிமைகளையும் கொண்டு நடத்தப்படும் இந்த மீட்பு பயணத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். நமக்குள் ஒருபோதும் வேற்றுமையும் வேண்டாம் ஒற்றுமையோடு இருந்து செயல்படுவோம் என பாமக நிர்வாகிகளை கேட்டுக் கொண்ட அவர், சமூக வலைதளங்களில் நம்மைப் பற்றி வரும் பதிவுகளுக்கு பதிலளிக்காமல் திமுகவை எதிர்த்து பதிவு போடுங்கள் என பாமக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர் பரமசிவம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாராயணசாமி, மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




