Close
மார்ச் 7, 2026 8:01 மணி

கிராமத்திலிருந்து சென்னை ஐஐடி க்கு பயணம்: அரசு பள்ளி ஆசிரியர்களின் சாதனை என ஆட்சியர் பெருமிதம்

மாணவன் மணிஷர்மாவை அழைத்து வாழ்த்துக்கள் கூறிய மாவட்ட ஆட்சியர்

கல்வி அனைவருக்கும் எனும் வாசகத்தை முன்னிறுத்தி தற்போதைய திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை பெரிதளவில் மேம்படுத்தி வருகிறது.

ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைவருக்கும் அனைத்து சிறப்பு கல்வி திட்டங்களையும் வழங்கி கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வி கனவை நிஜமாக்கி வருகிறது என்பது நிதர்சனமே.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் அடுத்த இளநீர்குன்றம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மனோகரன்- சாமுண்டீஸ்வரி தம்பதியரின் மகனான மணிஷர்மா ஆரம்பக் கல்வியை கிராமத்திலும், உயர் கல்வியை பெருநகர் மாதிரி பள்ளியிலும் பயின்று பத்தாம் வகுப்பில் 436 மதிபெண்கள் பெற்றார்.

இவரது கல்வி ஆர்வத்தை மாவட்ட கல்வி நிர்வாகம் கண்டு அவரை மணிமங்கலம் பகுதியில் செயல்படும் மாவட்ட மாதிரி அரசு உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயில அனுமதித்தனர். இதனுடன் பல்வேறு உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கான வகுப்புகளும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடத்தப்படுகிறது.

அவ்வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பள்ளி விடுதியில் தங்கி மாநில பாடத்திட்ட கல்வி உடன் உயர்கல்வி நுழைவுத் தேர்வுக்கான படிப்பையும் கற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப கல்வியாகமான ஐஐடியில் கடற்படை கட்டிடக் கலைஞர் மற்றும் கடல் பொறியியல் படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான செலவு ரூபாய் 2 லட்சத்து 79 ஆயிரத்து 350 ஆயிரம் ரூபாய் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக அரசு செலுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியில் அரசு பள்ளி மாணவன் தேர்வாகி சேர்ந்தது அரசு பள்ளியில் பெருமையை மீண்டும் உயர்த்தி உள்ளது. இதன் செய்தி கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மாணவன் மணிஷர்மாவை அழைத்து வாழ்த்துகள் கூறி அவருக்கு தேவையான உடைகள் , ஷூ , பேக் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இதுகுறித்து மாணவன் கூறுகையில், எனது பெற்றோர் கடின உழைப்பில் தன்னையும், தனது இரு சகோதரிகளையும் உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது நிறைவேறி உள்ளதாகவும், ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் தனக்கு பெரிதும் உதவியதாகவும், தற்போது ஐஐடியில் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது நான் முதல்வன் திட்டத்தின் மேலும் பெருமை சேர்த்துள்ளது என தெரிவித்தார் .

இதுகுறித்து இயற்பியல் ஆசிரியர் கூறுகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை மாதிரி பள்ளிகளை உருவாக்கி மாநில பாடத்திட்டத்தின் கூடவே உயர் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் எண்ணத்தை ஈடேறும் வகையில் சிறப்பு வகுப்புகள் வழிகாட்டுதல்கள் என தொடர்ச்சியாக செய்வதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி படிப்பது அதிகரித்து வருவதாகவும் இது தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு பெருமையாகும் என தெரிவித்தார்.

சிறிய கிராமத்தில் இருந்து சென்னை உயர் கல்வி நிறுவனத்திற்கு பயில செல்லும் இம்மாணவனால் தமிழக கல்வியின் தரம் உயர்ந்துள்ளது நிஜமே..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top