Close
மார்ச் 7, 2026 7:19 மணி

புதிய நியாய விலை கடை: திறந்து வைத்த துணை சபாநாயகர்

புதிய நியாய விலை கடை திறந்து வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த வெளுங்குநந்தல் ஊராட்சியில் உள்ள மட்டப்பறை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, தலைமை தாங்கினார்.  முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய செயலாளர் ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விற்பனையாளர் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து பேசியதாவது,

வெளுங்குநந்தல் ஊராட்சியில் முழுநேர கூட்டுறவு நியாயவிலைக் கடையில் உள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 720 இருந்தது. ஆனால் முழு நேர ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று தான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்தது.

அதனால் அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் முழுநேர ரேஷன் கடையில் இருந்து சுமார் 180 குடும்ப அட்டைகளை தனியாக பிரித்து இந்த மட்டப்பறை கிராமத்தில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் தொலைதூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய நிலை இல்லாமல் அவர்களின் அருகாமையில் பகுதிநேர ரேஷன் கடையில் அரசு வழங்கும் ரேஷன் உபயோக பொருட்களை சுலபமாக பெறலாம்.

இதன் மூலம் மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்று  கூறினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் ஜீவானந்தம், வட்ட வழங்கல் அலுவலர் தியாகராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top