தென்காசி மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் வருகின்ற ஆறாம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு மாநில தலைவர் செல்வ பெருந்தகை வர உள்ளார். அவரது வரவேற்பு மற்றும் கூட்டம் நடத்துவது தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தொகுதி பொறுப்பாளர் சிலுவை கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்திற்கு வருகை தரும் மாநிலத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பது, பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் வட்டாரத் தலைவர்கள் குற்றாலம் பெருமாள், கதிரவன், நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், நகர பொருளாளர் ஈஸ்வரன், பேரூர் கழக தலைவர்கள் முப்புடாதி பாண்டியன், சிங்கக்குட்டி, உட்பட கட்சி நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.




