தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் கூட்ட அரங்கில் வைத்து இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செல்லம்மாள் தலைமை வகித்தார். கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய துணை சேர்மன் மகேஷ் மாயவன் முன்னிலை வகித்தார் . கடையம் ஒன்றிய’ ஆணையாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார் .
இந்த சிறப்பு கூட்டத்தில் இரண்டு அடுக்கு கொண்ட சமுதாய நலக்கூடம் மற்றும் இரண்டு தளம் சமுதாய நலக்கூடம் ஆகிய இரண்டு சமுதாய நலக்கூடங்களை பராமரிப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
இதற்காக பணி ஆணை வழங்குவதற்கு மன்றம் கூடியது. அப்போது நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் ஆறு ஒன்றிய குழு உறுப்பினர்கள் சமுதாய நலக்கூடத்தை பராமரிப்பதற்கு பணி ஆணை வழங்க ஆதரவு தெரிவித்தனர். 8 ஒன்றிய குழு உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .
இந்த தீர்மானத்தை திமுக சேர்மன் செல்லம்மாள் கொண்டு வந்த தீர்மானத்தை திமுகவை சேர்ந்த எட்டு கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து நிராகரித்தது குறிப்பிடத்தக்கது .
கூட்டத்தில் பணி ஆணை நிராகரிப்பதற்கான காரணம் யூனியன் துணை சேர்மன் கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாதவன் கையூட்டு கேட்பதால் இந்த பணிகள் நிறுத்தப்படுவதாக கூறி கடையம் தெற்கு ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது .
இதுகுறித்து கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் கூறுகையில், இந்த இரண்டு சமுதாய நலக்கூடம் திறந்த மூன்று மாதங்களாக பூட்டிய கிடப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் தனியார் மண்டபத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன் மக்கள் வளர்ச்சி பணிகளை தடுத்து நிறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து மக்கள் பணிகளை திமுக உறுப்பினர்கள் துணை சேர்மன் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது




