Close
மார்ச் 7, 2026 8:01 மணி

உசிலம்பட்டி அருகே கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

உசிலம்பட்டி அருகே, ஆ.இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனஞ்சி பெருமாள் – கல்யாண கருப்பசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஆ.இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது அனஞ்சி பெருமாள், கல்யாண கருப்பசாமி திருக்கோவில்.

இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக ,நேற்றைய முன் தினம் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கப்பட்டு இன்று பூர்ணாவதி யாகத்துடன் மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடாகி, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து, அனஞ்சி பெருமாள் சுவாமிக்கும் – மூல ஸ்தானத்தில் உள்ள கல்யாண கருப்பசாமிக்கும் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top