திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜவ்வாதுமலை 25 ஆம் ஆண்டு கோடை விழாவில் 18062 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஒரு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி 17 புதிய கட்டடங்கள் ஆகிய வளர்ச்சி பணிகளை ரூ132.02 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் .
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி, ஜோதி, அம்பேத்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில்;
இன்று இந்த ஜவ்வாது மலை கோடை விழா நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சார்பில் மொத்தம் 18062 பயனாளிகளுக்கு ரூபாய் 132.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகள் சார்பில் நல திட்ட உதவிகள், பல்வேறு பணிகள் , தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்தனை திட்டங்களும் திராவிட மாடல் ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேரிலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் நலத்திட்ட உதவிகளையும் மலை வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக வழங்கி வருகிறார்.

கடந்த 30 ஆண்டுக்கு முன்பு இந்த ஜவ்வாதுமலையில் வர வேண்டும் என்றால் அந்த நேரத்தில் இந்த ஜவ்வாது மலையில் சரியான முறையில் சாலையும் இல்லை போக்குவரத்து வசதியும் இல்லை. ஆனால் இப்பொழுது பல்வேறு சாலைகள் பல்வேறு போக்குவரத்து வசதிகள் அனைத்தும் இந்த திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மலைவாழ் மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவதற்காக வழங்கி வருகிறார். இதன் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்க்கைதரம் தொடர்ந்து உயர்ந்தி வருகிறது.
கோரிக்கை நாயகன்
அதேபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு. தி.சரவணனும் மு.பெ.கிரியும் தொடர்ந்து தன்னுடைய தொகுதிகளுக்காக எண்ணற்ற மனுக்கள் கொடுத்து தொடர்ந்து வளர்ச்சி பணிகளாக தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதிக்கா எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் பார்க்கும் எல்லா நேரத்திலும் தன் தொகுதிக்காக வளர்ச்சியான பணிகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பல்வேறு கட்டிடப் பணிகளும் சாலை பணிகளும் மேம்பாலம் பணிகளும் வேண்டுமென்று தொடர்ந்து என்னிடம் கோரிக்கைவைத்து முதலமைச்சராலும் துணை முதலமைச்சர் ஆனாலும் என்னாலும் அமைச்சர் பெருமக்களாலும் தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றி பெற்று வருகிறார். இதனால் தான் அவருக்கு கோரிக்கை நாயகன் என்று நான் பெயர் வைத்துள்ளேன்.
ஜவ்வாது மலையில் பொதுப்பணி துறை மூலம் சுற்றுலா மாளிகை ஜவ்வாது மலைக்கு சுற்றுலா தளம் என்று பெயர் சூட்டி சுற்றுலா வளாகமாக மாற்றப்பட்டது அதேபோல் எண்ணற்ற வளர்ச்சி பணிகளும் ஜவ்வாது மலைக்காக மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பெ ற்றுக்கொடுத்து வரப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, இ்வாறு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் மணி, மாவட்ட உதவி வன பாதுகாவலர் வினோத்ராஜ், தாட்கோமேலாளர் ஏழுமலை, செயற்பொறியாளர் இளங்கோ , உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன் , மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கார்த்திக் , உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.




