Close
மார்ச் 7, 2026 8:01 மணி

“மூத்த குடிமக்கள் செயலியை” பயன்படுத்தி மூத்த குடிமக்கள் பயன்பெறலாம் : ஆட்சியர் தகவல்..!

மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்

மூத்த குடிமக்கள் வழிகாட்டுதல் விவரங்களை அறிந்து கொள்ள மூத்த குடிமக்கள் செயலியை பயன்படுத்துங்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மூத்த குடிமக்கள் நலன் கருதி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலியை Seniorcitizen.insocialwelfare. tn.gov.in கைபேசி செயலி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் செப்டம்பர் 2023 ல் வெளியிடப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்தகைபேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள் மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும் இந்த மூத்த குடிமக்கள் கைபேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த கைப்பேசி செயலி மூலம் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பலரும் பயன்பெற்று வருகிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து பொதுமக்களிடமும் இந்த கைபேசி செயலி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திட விளம்பரம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மூத்த குடிமக்கள் செயலி (கைபேசி செயலி) பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு மூத்த குடிமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு திருவண்ணாமைைல மாவட்ட ஆட்சித்தலைவர்  தர்ப்பகராஜ், தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top