நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திரைப்பட நடிகை அம்பிகா சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இப்ப வரைக்கும் தமிழ் சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அம்பிகா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக 4 ஆம் பிரகாரத்தில் உள்ள சிறிய நந்தியை தொட்டு வணங்கினார். அதனைத் தொடர்ந்து சம்பந்த விநாயகரை வழிபட்டு பின்னர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் சார்பில் பிரசாதங்களை வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் நடிகை அம்பிகாவுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அப்போது அம்பிகாவின் ரசிகை ஒருவர் பல வருடங்களாக உங்களை பார்க்க முடியுமா? என்று எண்ணி இருந்த நிலையில் இன்று அண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையார் புண்ணியத்தில் உங்களை பார்க்க வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஆனந்தக் கண்ணீர் வடித்து அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் . தொடர்ந்து கோவில் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பக்தர்கள் என அனைவருடனும் இணைந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த நடிகை அம்பிகா
அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. கடந்த ஒரு மாத காலமாக அண்ணாமலையார் கோவிலும் அண்ணாமலையார் படமும் தனக்கு ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. இன்று அண்ணாமலையாரை மிகுந்த சந்தோஷத்துடன் தரிசனம் செய்தேன்.

அரசியலுக்கு வருவீர்களா
மேலும் அரசியலுக்கு வருவீர்களா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வருவது எனக்கு தெரியாது, ஆனால் தனக்கு அரசியல் பிடிக்கும் , நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றும் அதற்காகத்தான் இன்று அண்ணாமலையார் கோயிலுக்கு வந்திருக்கிறேனா? என்றும் தெரிவித்தார்.
நடிகர்கள் போதை பொருள் வழக்கில் சிக்கி உள்ளார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்தவர் போதை பொருள் உயிரை கெடுக்கும், யார் செய்கிறார்களோ அவர்களை பார்த்து மற்றவர்கள் செய்வார்கள் அதனால் அது மிகவும் தப்பு தப்பு தப்பு , 3 வயதானாலும் சரி 99 வயதானாலும் சரி போதை பொருளை எவர் பயன்படுத்தினாலும் தவறு எனக் கூறினார்.




