நாமக்கல்:
நாமக்கல்லில் 2 இடங்களில் நகர்ப்புற ஆரம்பு சுகாதார நிலையங்களை தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களை வீடியோ கான்பரங்சிங் மூலம் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சி, கொண்டிசெட்டிப்பட்டி – பெரியபட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
பின்னர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் துர்காமூர்த்தி தøமை வகித்தார். எம்.பி. மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதை துவக்கி வைத்தார்.
நகர்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகளை வழங்கும் வகையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாநகராட்சி கொண்டிசெட்டிபட்டி – பெரியபட்டி பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைப்பதன் மூலம் 55,246 மக்கள் பயனடைவார்கள். இங்கு டாக்டர், நர்ஸ், பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியின் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு மருத்துவ சேவை அளிக்கப்படும்.
மேலும் நேற்று, பள்ளிபாளையம் நகராட்சி நாட்டாக்கவுண்டன்புதூர் மற்றும் நாமக்கல் மாநகராட்சி கணேசபுரம் பகுதியில் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிப்பாளையம் பகுதியில் 11,648 மக்களும், கணேசபுரம் பகுதியில் 14,742 மக்களும் பயனடைவார்கள்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், துணை மேயர் பூபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.




