Close
ஏப்ரல் 24, 2026 2:51 காலை

‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு..!

கோப்பு படம்

முதலமைச்சரின் ‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறுங்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

மக்கள் நலமும், நல்வாழ்வும் அவர்கள் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகிறது. உடல்நலம் ஊட்டச்சத்துமிக்க உணவினை உரிய அளவில் உட்கொள்வது இன்றியமையாததாகும். ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் காய்கறிகள், பெரும்பங்காற்றுகின்றன. பழங்கள், பயறுவகைகள், சிறுதானியங்கள் ஊட்டச்சத்து வழங்கும் இந்த விளை பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்னும் புதிய திட்டம் தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டில் 125 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கிட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் வேளாண்துறை மூலம் பயறுவகை உற்பத்தியில் தன்விறைவு பெற்று உணவு பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் பயறு பெருக்கும் திட்டம், துவரை பருப்பினை பெருக்கிட துவரை சாகுபடி பரப்பு விரிவாக்கம் மற்றும் புரதசத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகளை இல்லம் தோறும் வளர்க்கும் பொருட்டு

“பயறு வகைகள் விதைதொகுப்புத் திட்டம்” போன்ற 3 திட்டக்கூறுகளும், தோட்டக்கலைத் துறையின் மூலம் தஞ்சற்று காய்கறிகள் கிடைத்திட 100 சதவீத மானியத்தில் “காய்கறிகள் விதைதொகுப்பு  ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் 100 சதவீதம் மானியத்தில்”பழச்செடிகள் தொகுப்பு” காய்கறிகளின் தேவை பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையில் “காய்கறி பரப்பு விரிவாக்கம்”. வைட்டமின், நார்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்த பழங்களின் சாகுபடியினை அதிகரித்திட “பழங்கள் பரப்பு விரிவாக்கம், பந்தல் காய்கறிகளின் உற்பத்தியினை அதிகரித்திட பந்தல் காய்கறிகள் சாகுபடி மற்றும் புரதசத்துமிகுந்த காளான் உற்பத்தியினை பெருக்குவதற்கு காளான் உற்பத்திகூடம் அமைத்தல்” போன்ற 8 திட்டகூறுகளும் இந்தொகுப்பின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.

இத் திட்டத் தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக இத்திட்டத்தினை துவக்கி வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்திட்டம் செயலபடுத்தப்பட உள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ்பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top