Close
மார்ச் 7, 2026 6:13 மணி

காஞ்சிபுரம் அருகே ஆயிரம் ஆலமரம் நடவு துவக்க விழா: நீதிபதி பா.யு. செம்மல் துவக்கி வைத்து வாழ்த்துரை

காஞ்சிபுரம் அடுத்த நத்தாநல்லூர் மேல்தாங்கல் பகுதியில் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் ஆயிரம் ஆலமரம் நடவு துவக்க விழாவினை காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பா.யு. செம்மல் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்..

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் , விதைகள் தன்னார்வ அமைப்பு என்ற அமைப்பினர் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பனை விதைகளை பல்வேறு நீர்நிலைகளில் நடவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஆயிரம் ஆல மரங்கள் நடவு எனும் நிகழ்வினை துவங்க திட்டமிட்டு , வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் மேல்தாங்கல் பகுதியில் இன்று துவக்க விழா நிகழ்வு அமைப்பின் தலைவர் பசுமைசரண் தலைமையில் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பா.யு.செம்மல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் உரையாற்றிய நீதிபதி.பா.யு. செம்மல், சங்க புராண காலம் மற்றும் அரசர் காலங்களில் மரத்தின் பயன்களை உணர்ந்து அதனை போற்றி பாதுகாத்து வந்தனர்.

மரம் வெட்ட நினைக்கும் நபருக்கு கூட அது நிழலை தந்து உதவி உள்ளது என்பதும், நிதர்சனமாக தெரிய உள்ளது எனவே அதனை போற்றி பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆயிரம் ஆல மரங்கள் நடவு குறித்து விதைகள் தன்னார்வு அமைப்பு தலைவர் சரண் கூறுகையில், பறவைகளுக்கு உணவு , இருப்பிடம் உள்ளிட்டவைகளுக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் ஆலமரத்தின் அனைத்து பொருட்களும் மருத்துவ குணத்தினையும் கொண்டது உள்ளது.

மழை பொழிவை ஈர்த்து மழை பெய்ய வழிவகை செய்தும் , நீரை உறிந்து வைத்துக் கொண்டு கோடை காலத்திலும் அதனை பயன்படுத்தி வளர்ச்சி காணும்.

எனவே இதனை தற்போதைய காலத்திற்கு ஏற்ப 1000 நடவு செய்து பராமரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top