Close
மார்ச் 7, 2026 3:28 மணி

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு பணிகள்: மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சியின் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அல்லாபாத் ஏரி. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் காடுகள் போன்று பெரிய அளவில் முட்புதர்கள் அமைந்து உள்ளது.

இதனை நீர் ஆதாரமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் மாநகராட்சி மேயர் ஆகியோரின் நடவடிக்கையின் மூலம் எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் மற்றும் கோமோட்சோ தொழிற்சாலை இணைந்து இந்த ஏரியினை புனரமைக்கும் பணியில் ஈடுபட முடிவு செய்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பணிகள் துவங்கியது.

இப்பணிக்காக சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஜேசிபி இயந்திரத்தினை கொமோட்சோ நிறுவனம் நண்கொடையாக அளித்துள்ளது ‌.

இந்நிலையில் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில் இதனை இன்று மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உடன் கோமோட்சோ தொழிற்சாலை நிர்வாக மேலாளர் நோபோகாஷு டாக்யுசி ஆகியோர் பணிகளை பார்வையிட்டனர்.

பணிகள் குறித்து மேயர் அவருக்கு விரிவான விளக்கம் அளித்தும், மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கி எடுத்துரைத்தார்.

மேலும் இந்த பகுதியில் நடைபாதை, சுற்றுச்சுவர், மரம் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள தொழிற்சாலையின் சமூக பங்களிப்பு நிதியினை அளிக்குமாறு கோரிக்கை மனு அளித்தார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் காஞ்சிபுரத்தில் மாபெரும் நீர் ஆதாரமாக இந்த அல்லாபாத் ஏரி மாறும் என்பதில் ஐயமில்லை.

இந்நிகழ்ச்சியின் போது மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு , சுரேஷ் , கோமோட்சோ தொழிற்சாலையில் மனித வள மேம்பாட்டு உதவி மேலாளர் கைலாஷ், முதன்மை மேலாளர் தாக்காஷி, உதவி மேலாளர் அருண் ராஜ், எக்ஸ்நோரா அமைப்பின் நிர்வாகி மோகனசுந்தரம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மோகன் மேகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top