Close
மார்ச் 7, 2026 8:01 மணி

ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகளில் குழந்தை தொழிலாளர்கள்?: தொழிலாளர் நல துணை ஆணையர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தி வைத்து ஆபத்தான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

இம்மனு மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் தொழிலாளர் நலத்துறைக்கு அனுப்பப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு பதிலளிக்க அறிவுறுத்தினார்.

இந்நிலையில் இன்று திடீரென தொழிலாளர் நல இணை ஆணையர் கமலகண்ணன் தலைமையிலான தொழிலாளர் நலத்துறை மூன்று பேர் கொண்ட குழுவினர் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பணியில் இருந்த சந்தேகத்திற்கு இடமான நபரை அழைத்து விசாரித்த போது அவருக்கு வயது 16 என்பது தெரிய வந்தது உடனடியாக ஆபத்தான பணிகளை மேற்கொள்ள இது போன்ற நபர்களை பணிக்கு வைக்க கூடாது என ஒப்பந்ததாரர் மற்றும் திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உடனடியாக அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.

இது குறித்து துணை ஆணையர் கமலக்கண்ணன் கூறுகையில், அரசு விதிகளின்படி கட்டிட இடிபாடுகள், குறுகலான பாதைகள் மற்றும் நீர் நிறைந்த பகுதி மற்றும் மேல் தளங்களில் பணிபுரிய உரிய வயது முறை உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இங்கு ஆய்வு மேற்கொண்டதில் குழந்தை தொழிலாளர்கள் எவரும் இல்லை என்பதும் ஒருவர் மட்டும் அவருடைய வயது சரி பார்த்து செய்யப்பட்டு அவர் 16 வயது எட்டியுள்ள நிலையில் அவரை இப்பணிகளில் ஈடுபடுத்த கூடாது என கூறி அறிவுறுத்தி உள்ளோம்.

மேலும் இது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அரசு விதிகள் முழுவதும் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.

இதனால் திருக்கோயில் வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top