Close
மார்ச் 7, 2026 8:01 மணி

கீழ்பென்னாத்தூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம், துணை சபாநாயகர், ஆட்சியர் பங்கேற்பு..!

தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் கீழ்பென்னாத்தூர் வட்டம், கொளத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ், முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றியாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடி சென்று மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களை வழங்கும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஆகையால் இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக முதன்மையாக முன்னோறி கொண்டிருக்கிறது . இந்தியாவிலேயே நமது மாநிலத்தில் தான் முதன் முதலில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது ,

உழைக்கும் மகளிருக்கு இது உரிமையாக வழங்குவதால் இத்திட்டத்திற்கு பெயர் மகளிர் உரிமைத் தொகை என்பதாகும். மேலும் வருகின்ற 15 ஆம் தேதியில் இருந்து “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” துவக்கி வைக்கப்பட உள்ளது. முன்னதாக செயல்படுத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு தமிழ்நாட்டிலேயே அதிக மனுக்களின் மீது குறைகளை நிவர்த்தி செய்த மாவட்டமாக நமது மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது.

விடுப்பட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களு ம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் வழங்கப்படுகிறது. ஆகவே மக்கள் அரசின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கேட்டுக்கொண்டார்.

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை 28 பயனாளிகளுக்கு இணையவழி பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 28 பயனாளிகளுக்கு இணையவழி பட்டா மாறுதல் (உட்பிரிவு) க்கான ஆணைகளையும், 10 பயனாளிகளுக்கு சான்றிதழ்களும், வட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக 13 பயனாளிகளுக்கு ரூ. 1 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய குடும்ப அட்டைகளையும், வேளாண்மைத்துறை , தோட்டக்கலைத்துறை , குழந்தைகள் வளர்ச்சி துறை, பள்ளி கல்வித்துறை , சுகாதாரத்துறை , மக்களைத்தேடி மருத்துவம் தொகுப்பு நலத்திட்ட உதவிகள், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் மூலம் 121 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  ஆதியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி, அம்ருதா எஸ்.குமார், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் ஷான்பாஷா, மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top