நாமக்கல்:
தமிழக அரசு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் தாலுக்கா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், தமிழகத்தில் டயர் ரீட்ரெடிங் தொழில் பல்வேறு காரணங்களால் மிகவும் நலிவடைந்து வருகிறது.
இந்த நிலையில் மின்கட்டண உயர்வால் மேலும் பாதிக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாநகரில் மின்தடை அறிவிப்பை, முறையாகவும் சரியாகவும் மின்சார வாரியம் செயல்படுத்தவேண்டும் என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர் மல்லீஸ்வரன் வரவு செலவு வாசித்தார். துணைத் தலைவர் தர்மலிங்கம், இனச் செயலாளார் ஹரி உள்ளிட்ட திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




