Close
மார்ச் 7, 2026 3:10 மணி

மணியனூர் கிராமத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..!

Namakkal

கோப்பு படம்

நாமக்கல்:

மணியனூர் கிராமத்தில் நடைபெற்ற, கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டைன விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகில் உள்ள மணியனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருசேசன் மகன் கணேசன் (33). இவர் கடந்த 2022-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து நல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி சரவணகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்மீது நாமக்கல் எஸ்சி., எஸ்.டி. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை முடிவுற்று, நேற்று அந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளி சரவணகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சரவணகுமார் போலீஸ் பாதுகாகாப்புடன் சேலம் மத்திய சிறைச் சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top