Close
ஏப்ரல் 23, 2026 11:34 மணி

ஆடி அமாவாசையை முன்னிட்டு மோகனூர் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபாடு..!

ஆடி அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரி கரையில், ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் படைத்து வழிபாடு நடத்தினார்கள்.

நாமக்கல் :

ஆடி அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினார்கள்.

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைவுகூறும் ஒரு புனித நாளாகும். இந்த நாளில், தமிழ் மக்கள் தர்ப்பணம் போன்ற சடங்குகளைச் செய்வார்கள் மற்றும் புனித நீராடுவார்கள். ஆடி அமாவாசை அன்று இந்துக்கள், தங்கள் இறந்த அன்புக்குரியவர்களின் ஆன்மாக்களை சாந்திப்படுத்த அரிசி, எள், தண்ணீர் மற்றும் பிற புனிதப் பொருட்களை தர்ப்பணமாக படைத்து வழங்குவார்கள். இந்த சடங்கு முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு அமைதியைத் தரும் என்றும், அதற்கு ஈடாக அவர்களின் ஆசிகளைப் பெறும் என்றும் நம்பப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் உள்ள படித்துறையில், இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பொதுமக்கள், நீண்ட வரிசையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் காவிரி ஆற்றில் பிண்டம் வைத்து, மோட்ச தீபம் ஏற்றி புனித நீராடினார்கள். தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றின் கரையில் உள்ள அசலதீபேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top