தென்காசியில் பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாசு பிறந்த நாளை முன்னிட்டு பாமகவினர் திருக்கோயில் மற்றும் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழகத்தில் பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாசு 87வது பிறந்த நாளை அவரது கட்சியினர் பசுமை தாயக நாளாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கராயன் தலைமையில் பாமகவினர் தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து சக்தி நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து அச்சம்புதூர் குடியிருப்பு பகுதிகளில் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது பள்ளிவாசல் உள்ள பெண்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்வுக்கு சிங்கராயன் தென்காசி பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார்.
முன்னிலை வகித்தவர்கள்: மாவட்ட தலைவர் சிவராஜ் , மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுசி சுந்தர் மாவட்ட துணைச் செயலாளர் பள்ளக்கால் கிருஷ்ணன் அவர்கள், குலசேகரன் அவர்கள் மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன். மாவட்ட தொழிற்சங்க தலைவர் முருகையா
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் திருமலை குமாரசாமி யாதவ், அய்யம்பெருமாள் பிள்ளை கலந்து கொண்டனர். வாழ்த்துரை வழங்க வருகை தந்தவர் கிருஷ்ணகுமார், பசுமைத்தாயக தலைவர் அர்ச்சுனன். மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயக்குமாரி. மாவட்ட மகளிர் அணி தலைவர் மகேஷ் @ மாடத்தி. மாவட்ட பொருளாளர் அயோனா சிங்கராயன் சமூக நீதிப் பேரவை தலைவர் கிருஷ்ணன் சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜேக்கப் முத்துப்பாண்டி ஒன்றிய செயலாளர் சாமி @ பரமசிவன். முருகன் ஜெயராஜ். சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் சிங்கராயன் ஏற்பாடு செய்திருந்தார்




