Close
மார்ச் 7, 2026 8:01 மணி

செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் புதிய தார் சாலை: பொதுமக்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் மேம்பாலத்தின் சாலை பழுதால் வாகன விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக இருந்த புகாரின் அடிப்படையில் நெடுஞ்சாலை துறை விரைந்து புதிய சாலை அமைத்துள்ளது பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது

காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே பாலாற்றின் குறுக்கே  சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் அமைந்துள்ளது.

இந்த மேம்பாலத்தில் உள்ள சாலைகள் பழுதடைந்த காரணமாக வாகனங்கள் விபத்து மற்றும் பழுதுகள் ஏற்பட்டு வாகனங்கள் நின்று விடுவதால் பல கிலோமீட்டர் தூரம் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் ஏற்பட்டு வந்தது.

இதுகுறித்து செய்தித்தாள்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பல்வேறு நபர்கள் பதிவிட்டதன் காரணமாக காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை உப கோட்டம் சார்பில், ஒரு கிலோமீட்டர் தூரம் பகுதிகள் நீக்கப்பட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

இதனால் வாகனங்கள் எந்தவித தங்கு தடையின்றி தற்போது சென்று வருவதால் பொதுமக்கள் இச்செயலை வரவேற்றுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top