Close
மார்ச் 7, 2026 6:04 மணி

குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலம் மேம்படாததற்கு இங்கு பணியாற்றிய ஆட்சியர்கள் தான் காரணம்: பாமக எம்.எல்.ஏ அருள் அதிரடி

தென்காசி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிங்காராயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து அடுத்த மாதம் 10ம் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஏராளமான மகளிர் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்டவையில் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக எம்எல்ஏ அருள் கூறுகையில், தென்காசி மாவட்டத்திற்கு தொடர்ந்து கேரளா மாநிலத்தவர்களே மாவட்ட ஆட்சியர்களாக வந்து கொண்டிருக்கின்றனர் எனவே இதன் காரணமாக இவர்கள் கேரளாவில் சிக்கிக் கொண்டு தென்காசி மாவட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த விடாமல் தடுக்கின்ற நோக்கத்தில் செயல்படுவதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தார்.

தமிழகத்தில் கொலைகள் மிகவும் சாதாரணமாகிவிட்டது, பல்வேறு கொலைகள் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் தமிழக அரசு இதனை கவனம் கொண்டு இரும்பு கரங்களை கொண்டு அடக்க வேண்டும் என கூறினார். அந்த வகையில் நெல்லையில் நடந்த கவின் ஆணவக்கொலை விவகாரத்தை தமிழக அரசு சிபிஐ மாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top