Close
மார்ச் 7, 2026 7:36 மணி

ஓபிஎஸ் தன்மானம் உள்ளவர், அதனால் கூட்டணியை விட்டு வெளியே வந்திருப்பார்: சீமான் கருத்து

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

ஓபிஎஸ் தன்மானம் உள்ளவர் அதனால் கூட்டணியை விட்டு வெளியே வந்திருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை வேட்டவலம் பகுதியில் பத்திரிக்கையாளர் மற்றும் யூடியூபர் ஏகலைவன் தாய் அன்னபூரணி மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இருக்க வேண்டும் என்று அவர்கள் வேலை செய்யவில்லை. ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கொடுக்கவில்லை. அவர் நீண்ட காலம் அரசியலில் இருக்கக்கூடியவர். 2 முறை முதலமைச்சராக இருந்தவர். அவருக்கு தன்மானம் உள்ளததன் காரணமாகத்தான் அவர் கூட்டணியை விட்டு வெளியே வந்திருப்பார் என தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் பிரேமதா விஜயகாந்த் முதலமைச்சரை சந்தித்தது நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது. அதிமுக கூட்டணியில் அவர்களுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை, மாநிலங்கள் அவையில் சீட்டு ஒதுக்கவில்லை, இதன் அடிப்படையில் அவர்கள் திமுக கூட்டணிக்கு செல்லலாம் என தனது கருத்தை தெரிவித்தார்.

செஞ்சி கோட்டை தங்களது பாட்டனார் கோட்டை. பாஜக அரசு யாரைக் கேட்டு இது மராட்டிய மன்னர்கள் கோட்டை என கூறியது என கேள்வி எழுப்பியவர் 300 ஆண்டு காலம் ஆனந்தகோன், கிருஷ்ணகோன் போன்றவர் ஆட்சி செய்தது கல்வெட்டில் உள்ளது. ஆனால் இவர்கள் திடீரென தொடர்ந்து மராட்டியர்களும் ஆட்சி செய்து உள்ளதாகவும் ஆனால் பாஜக அரசு இது திடீரென மராட்டிய மன்னர்கள் கோட்டை என தெரிவித்தது.

ஆனால் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜேந்திர சோழனுக்கு நாணயங்கள் வெளியிட்டுள்ளீர்கள். அதில் ஆங்கிலம்  ஹிந்தி இருப்பதாகவும் தமிழ் எங்கே? அவர் தமிழனுக்கு காசு வெளியிடும் போது தமிழ் மொழியை இல்லை. சிலை எப்போது வைப்பீர்கள். மேலும் தஞ்சை பெருவுடையார் கோவிலில் தலை வாசல் வழியாக யாரையாவது சென்று வர முடியுமா என கேள்வி எழுப்பினார்.

பாஜக ஆட்சியை ஜெயலலிதா கலைத்தது வரலாற்றில் ஒரு முக்கிய முடிவு என்றும், பாஜக ஆட்சி கலைத்த பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்து வரலாற்று பிழையை செய்து விட்டேன் என கூறினார். அவர் இறக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை. ஆனால் கலைஞர் பாஜக கூட்டணியை தூக்கிப்பிடித்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்தது வரலாற்றில் பெரும் பிழை என குறிப்பிட்டார்.

தற்போது அதிமுக எடப்பாடி எடுத்துள்ள முடிவு வரலாற்று பெரும் பிழை என குறிப்பிட்டார். தமிழ்நாட்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவுக்கு என்ன வரப்போகிறது என கேள்வி எழுப்பியவர், கடம்பூர் ராஜூ கூறியது தான் வரலாற்றில் பிழை என தெரிவித்தார்.

மேலும் திருவண்ணாமலை ஆந்திராவின் ஒரு மாவட்டமாக மாறி வருகிறது. அண்ணாமலையார் மாறி அருணாச்சலம் பின்னர் அருணா செலம் எனவும் மாறலாம். என்னை முதலமைச்சராக ஆக்கினால் நிலை மாறும் என குறிப்பிட்டார்.

திருவண்ணாமலையில் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலும் ஏன் தெலுங்கு வார்த்தை என கேள்வி எழுப்பினார். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களிடம் தான் நாம் தமிழர் கட்சி கூட்டணி என குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top