நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுக்காக்களில் நாளை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியூர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் நாளை 9ம் தேதி சனிக்கிழமை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளது. இதன்படி நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், இக்குறைதீர் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
அந்தந்த தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமை வகிக்க உள்ளனர். கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, பொதுமக்கள் தெரிவித்து அதற்கு தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது




