Close
மார்ச் 7, 2026 2:51 மணி

மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகை வைத்து மோசடி: பெண் வங்கி மேலாளர் கைது

தங்க நகைகளின் மதிப்பு ஒரு சவரன் 75000 என்கிற அளவிற்கு போய்விட்டது. தங்க நகைகளின் மதிப்பு அதிகமாக இருப்பதால் பலரும் நகைகளை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்குகிறார்கள்.

ஆனால் அப்படி நகைகளை அடகு வைக்க வரும் சிலர் மோசடிகளை அரங்கேற்றுகிறார்கள். வங்கி ஊழியர்கள் சிலரும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். இதே போன்ற சம்பவங்கள் மன்னார்குடி, தேனி, சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இப்போது நடந்துள்ளதாக புகார்கள் எழுந்து கைது நடவடிக்கையும் எடுககப்பட்டிருக்கிறது.

அந்த வரிசையில் திருவண்ணாமலையும் இணைந்துள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பைபாஸ் சாலை காந்திநகர் 3 வது தெருவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது, கூட்டுறவு வங்கியில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் கணக்கினை தொடங்கி நகைகளை அடகுவைத்துக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மங்கலம் அடுத்த கருமாரபட்டி கிராமத்தைசேர்ந்த ராமதாஸ், திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவரும் கடந்த ஆண்டு கவரிங் நகைகளை வங்கியில் வைத்து பணம் பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து ராமதாஸ், ஏழுமலை ஆகிய இருவரும் வங்கி மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் 20க்கும் மேற்பட்டவர்கள் மூலம் கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து சுமார் 3 கோடி ரூபாய்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முன்பு கூட்டு கூட்டுறவு வங்கியின் தணிக்கை பிரிவு அதிகாரிகள் காந்திநகர் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகைகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ராமதாஸ் மற்றும் ஏழுமலை உள்ளிட்ட 23 பேர் பெயரில் கவரிங் நகைகளை வைத்து ரூ.3 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன் மற்றும் வங்கி பணியாளர் உடந்தையாக இருந்ததை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி உத்தரவின்படி திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை குழுவினர் விசாரணைக்கு நடத்தினர்.

இந்த விசாரணையில் கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து சுமார் 3 கோடி மோசடி செய்யப்பட்டது உறுதியானது, இதை அடுத்து வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன், ஏஜெண்டாக செயல்பட்ட ஏழுமலை ஆகிய 3 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இது சம்பந்தமாக மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை வைத்து முகவராக செயல்பட்ட கருமாரப்பட்டி ராமதாஸ் மற்றும் கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்ற 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கவரிங் நகைகளை வைப்பதற்கு உறுதுணையாக இருந்த அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தயுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top