Close
மார்ச் 7, 2026 4:40 மணி

வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

தென்காசியில் துரத்தி துரத்தி கடிக்கும் வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலா பயணிகளை வெறிநாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த கோரிக்கை மனுவை அளிப்பதற்காக எஸ்டிபிஐ கட்சியைச் சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் கருப்புத் துணியால் தங்களது கண்களை கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் வரை திரண்டு வந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது, மாவட்டத்தில் வெறி நாய்களின் தொந்தரவு அதிகரித்து வருகிறது. இந்த வெறி நாய்கள் தொந்தரவு காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த கோரியும், பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்கும் வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top