Close
மார்ச் 7, 2026 6:03 மணி

பெரியபாளையத்தில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு அறுசுவை அன்னதானம்.

பெரியபாளையம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், முக கவசம்,உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக நிறுவன தலைவருமான கேப்டன் விஜயகாந்த் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் அறுசுவை அன்னதானமும், தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் பா.சுகுமாரன் தலைமையில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் விண்ணரசு கலந்துகொண்டு 500 பேருக்கு அறுசுவை அன்னதானத்துடன் இனிப்பு வழங்கினார்.

பின்னர் பெரியபாளையம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், முக கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.

இதில் நிர்வாகிகள், சிவகுமார்,முருகானந்தம், மோகன், நாராயணமூர்த்தி, புஷ்பலதா, சௌந்தர், செந்தில்குமார், பாபு, கோபால், மோகன், வினோத், சரவணன், தேவா, வேலு, பாலவாக்கம் குமார், ஆகியோர் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top