திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பள்ளி மாணவா்களுக்கான குழு போட்டிகள் நடைபெற்றன. இதில் 4,000 போ் பங்கேற்றனா்.
.இந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கான குழு போட்டிகளான ஆக்கி, கபடி, சிலம்பம், வாலிபால், கைப்பந்து, செஸ், கால்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா தலைமை தாங்கினார்.
இதில் ஹாக்கி, சிலம்பம், வாலிபால், கைப்பந்து, கால்பந்து ஆகியவை மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், செஸ் போட்டிகள் உள்விளையாட்டு அரங்கத்திலும், கபடி ஆயுதப்படை போலீஸ் மைதானத்திலும் நடந்தது.
இதில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கையுந்து பந்து மாநில அளவிலான தேர்வு போட்டி நடந்தது. இதில் சொரகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், நல்லவன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் விளையாடினர் .
இறுதி போட்டியில் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் சொரகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.
இந்தநிகழ்ச்சியில் மாவட்ட இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சண்முகப்பிரியா, மாவட்ட கையுந்து பந்து சங்கத் தலைவா் அரவிந்த்குமாா், உடற்கல்வி ஆசிரியா்கள் கணேஷ்பாபு சரத் அருண்மகேஷ் நேரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவிகள் போட்டிகளில் ஆா்வமாக பங்கேற்றனா்.
நடுவா்களாக பல்வேறு பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் ஈடுபட்டனா். போட்டிகளில் மொத்தம் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வா்கள் பங்கேற்றனா்.




