திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், சோமாசிபாடி மற்றும் திருவண்ணாமலை வட்டம், தேவனாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகா்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் முகாமானது நடைபெற்று வருகிறது. அதன்படி, கீழ்பென்னாத்தூா் வட்டம், சோமாசிபாடி அல் அமீன் கலைக் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை வட்டம், தேவனாம்பட்டு பகுதி சமுதாய கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு துறை வாரியாக பதிவு செய்யப்படுவதை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி, ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
மேலும் முகாமில் மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு பட்டா மாற்றத்திற்கான சான்றிதழ்களும், வாரிசு சான்றிதழ்களும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டிற்கான அட்டைகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நிதியுதவி, மகளிா் திட்டத்தின் கீழ் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வேளாண்மை துறை சாா்பில் உளுந்து விதை மானியங்களும் வழங்கினா்.
தொடர்ந்து துணை சபாநாயகர் பேசியதாவது
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தேவனாம்பட்டு, பெரியகளாம்பாடி, மேப்பத்துரை, முத்திரம்பூண்டி, உதிரம்பூண்டி, ஆகிய 5 கிராமங்களை இணைத்தும், கீழ்பெண்ணாத்தூர் வட்டம் சோமாசிபாடி உள்ளிட்ட கிராமங்களை இணைத்தும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மக்களை தேடி அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும், அதே போல் அரசு அலுவலர்கள் மக்களை தேடி திட்டங்கள் அனைத்தும் கொண்டு சென்று அவர்களுக்கு வழங்க வேண்டும்.
மக்கள் மனு கொடுக்க வேண்டும் என்றால் இதற்கு முன்பு தாலுகா அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் சென்று தான் மனு கொடுக்க வேண்டிய நிலை இருந்தது
அந்த நிலையை மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை தேடி அனைத்து அலுவலர்களும் சென்று அவர்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்று உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தி வருகிறார். இதில் மக்கள் ஆர்வத்துடன் வந்து மனுக்கள் கொடுத்து வருகின்றனர் .
இந்த முகாமில் கொடுக்கும் மனுக்கள் மீது 45 தினத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனால் மக்கள் கொடுக்கும் மனுக்களின் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படுகிறது. அதனால் மக்கள் ஆர்வத்துடன் வந்து மனுக்கள் கொடுத்து வருகின்றனர் என கூறினார் .
நிகழ்ச்சிகளில் திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் மோகனராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.




