Close
மார்ச் 7, 2026 6:03 மணி

அண்ணாமலையார் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோயில் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி மற்றும் அண்ணாமலையார், அம்மன் சன்னதி, நவகிரக சன்னதிகளில் வழிபட்டார். தொடர்ந்து அவருக்கு கோயில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்,

தமிழக முழுவதும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று கழக நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து மாபெரும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளோம். முதற்கட்ட சுற்றுப்பயணம் முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தலைவர் விஜயகாந்த் மக்களை விரும்பிய ஒரு தலைவர் எப்பொழுதும் மக்களை உண்மையாக நேசித்த தலைவர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் ஆசிர்வாதத்தோடு ரத யாத்திரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம். மூங்கில் துறை பட்டில் இருந்த போது கேப்டனின் மனைவியாக இந்த அண்ணாமலையார் கோவிலிலிருந்து தான் நான் சென்னைக்கு புறப்பட்டு சென்றேன் அந்த நாட்களை நான் மறந்துவிட முடியாது.

கேப்டன் ஒரு சிறந்த சிவபக்தர் அண்ணாமலையார் மீது மிகுந்த பக்தி கொண்டவர். விஜயகாந்த் மதுரையில் மாநாடு வைத்து கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் எந்த தேதி என்பதை அறிவித்தது இதே திருவண்ணாமலை இருந்து தான். இதே போன்று எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் இந்த திருவண்ணாமலைக்கும் வரலாறு நிறைய உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்பது அவர்களுடைய விருப்பம் அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக விலகுகிறார்கள்.

தேமுதிக கூட்டணி அறிவிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் கடலூரில் நடைபெற உள்ள மாநாட்டில் தெளிவுபடுத்துவோம்.

கருங்காலி கட்டை

மேலும் கருங்காலி கட்டையோடு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்தது குறித்து அவர் கூறுகையில் சாமி தரிசனத்தின் போது எப்போதும் கேப்டன் கையில் கருங்காலி கட்டை வைத்திருப்பார். இன்று நான் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்துள்ளதால் கடவுளின் காலடியில் வைத்து பிரார்த்தனை செய்து இதனை வீட்டிற்கு கொண்டு செல்கிறேன் என கூறினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் நேரு, கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top