எஸ்பிஓஏ பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வரும் கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்திற்கு வருகை தந்தனர். அங்கு அவர்கள் காப்பகத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற பாட்டிகளை சந்தித்து, அவர்களிடமிருந்து அன்பும் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.
பாட்டிகளின் வாழ்க்கைப் போராட்டங்களும் அனுபவங்களும் நிறைந்த கதைகளை கேட்ட மாணவர்கள் மனம் நெகிழ்ந்து, தங்கள் வீட்டிலுள்ள முதியோர்களை ஒருபோதும் கைவிடக் கூடாது என்ற உறுதியையும் எடுத்துக்கொண்டனர்.

பாட்டிகளை மகிழ்விக்கும் விதமாக மாணவர்கள் இனிய பாடல்களைப் பாடி, நடனமாடி, விளையாட்டுகளில் ஈடுபட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
மாணவர்களும் பாட்டிகளும் ஒன்றாகக் கலந்து கொண்ட அந்த நாள் உண்மையிலேயே அன்பும் உற்சாகமும் நிரம்பிய ஒரு மறக்கமுடியாத நாளாக அமைந்தது.
ஈரநெஞ்சம் அறக்கட்டளை


