நவீன காலத்தில் தமிழ் நாடகக் கலையினை வடிவமைத்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். சிறந்த நாடகங்கள் பலவற்றை எழுதியும், அரங்கேற்றம் செய்தும், தாமே நடித்துக் காட்டியும், பிறருக்குப் பயிற்சியளித்தும், நடிக்க வைத்தும், தமிழ் நாடக அரங்கில் ஒரு புத்தொளியை உண்டாக்கியவர்.
தமிழ் நாடக மறுமலர்ச்சி என்பது இவரிடமிருந்து தொடங்குகிறது. இவருடைய வசனங்களும், பாடல்களும் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கும் மட்டுமல்லாது தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியது.
பாண்டிச்சேரியில் தனது வாழ்வின், கடைசி சில ஆண்டுகளை கழித்து வந்த சங்கரதாஸ் சுவாமிகள், நவம்பர் 13, 1922 அன்று இயற்கை எய்தினார். அவர் இறந்த பல ஆண்டுகளுக்கு பிறகு, டி.கே.சண்முகம் அவர்களின் பெருமுயற்சியால், பாண்டிச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவகம் அமைக்கப் பட்டது.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் அந்தக் காலத்திலேயே தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்பதன் வாயிலாகவே அவரது ஆங்கிலப் புலமையை அறிந்துகொள்ள முடியும்.
தனது வாழ்க்கையை நாடகக் கலைக்காக முற்றிலும் அர்ப்பணித்த சங்கரதாஸ் அவர்கள், காளிதாசர், ஷேக்ஸ்பியர், மோலியர் முதலிய உலக நாடக மேதைகளின் வரிசையில் வைத்துப் போற்றுதற்குரியவர்.
சங்கரதாஸ் சுவாமிகள் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில் ‘வள்ளி திருமணம், வீர பாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், சத்தியவான் சாவித்திரி, நள தமயந்தி போன்ற நாடகங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்திலிருந்து சங்கர்

