Close
மார்ச் 7, 2026 6:04 மணி

தீபாவளி பட்டாசுக்கடை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ், தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர், விதிமுறைகளைப் பின்பற்றி, ஆன்லைன் மூலம் வருகிற அக்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

  • மாவட்டத்திலுள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில் இருந்தும் பட்டாசு கடைக்கான விண்ணப்பங்களை வெப்சைட் மூலம் அப்லோடு செய்யலாம்.
  • விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு போட்டோ, அடையாள அட்டை (பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் நகல்) இணைக்க வேண்டும்.
  • லைசென்ஸ் கட்டணம் ரூ. 600 ஐ ஆன்லைன் மூலம் செலத்தி ரசீது இணைக்க வேண்டும்.
  • இடத்திற்கான பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக்கட்டிடம் எனில் பட்டா, வாடகை கட்டிடம் எனில் ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டிட திட்ட அனுமதி (ஏ4 அளவில்) இணைக்க வேண்டும்.
  • விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால் லைசென்சையும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான உத்தரவையும் ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

தற்காலிக பட்டாசு கடை அமைக்க லைசென்ஸ் கேட்டு விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top