Close
ஏப்ரல் 24, 2026 10:38 காலை

மல்லாங்கிணறு அண்ணா பிறந்த நாள் விழாவில் ஒரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

மல்லாங் கிணறில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங் கிணறில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நடை பெற்றது.

விழாவில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதன் பிறகு, அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் , காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கா. கண்ணன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் போஸ் என்ற ஜெயச்சந்திரன், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top