ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை பணியை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளிலும் திமுகவினர் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கை பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து தென்காசி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பாசிசத்தை வீழ்த்தக்கூடிய முதல்வராக இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளை பாதுகாப்பதில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை ஆளும்.
அந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட
- தென்காசி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 570 நபர்களும்,
- ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 769 நபர்களும்,
- கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 796 நபர்களும்
றுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த உறுப்பினர் சேர்க்கையானது தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை விட 10% அதிகம் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக பாக முகவர்கள் கூட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் வர உள்ளதாகவும் தெரிவித்தார்.




