தென்காசி மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காலை 9 மணி அளவில் கதென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை புரிந்தார்
வழிநெடுகிலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் வருகை புரிந்த முன்னாள் குடியரசு தலைவருக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார் அதனை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பலரும் சால்வை மற்றும் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.
அவருடன் சோகா நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரும், தென்காசி மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளருமான பிரசன்ன குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் வந்தனர்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் செயல் அலுவலர் பொன்னி தலைமையில் கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் தான் அணிந்திருந்த காலனியை கழட்டி விட்டு அதிகாரிகளுடன் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சென்றார். மூலவர் சன்னதிக்கு சென்ற அவர் காசி விஸ்வநாதரை வேத விற்பனர்கள் மந்திரம் வழங்க மனமுருக தரிசனம் செய்தார்.
அவருக்கு மலர் மாலை அணிவித்து கோவிலில் பூஜை செய்யப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து கோவில் வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.
குறிப்பாக, வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் உள்ள சிற்பக் கலைகளை முன்னாள் குடியரசுத் தலைவர் பார்வையிட்டு ரசித்தார். அவரின் வருகையை ஒட்டி கோவிலில் மற்ற பக்தர்களுக்கு அனுமதி மறுத்தப்பட்டிருந்தது.
தரிசனம் செய்த பின்பு கார் மூலம் ஆய்க்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னாள் குடியரசு தலைவர் தென்காசி கோவிலுக்கு வருகை புரிந்ததை ஒட்டி பல அடுக்கு காவல்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.




