திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த விழாவானது, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த விழாவின்போது சுவாமிகளின் அருள் வேண்டிய பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள், பூஜைகள் மற்றும் அன்னதானம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இவ் வருடத்திற்கான நவராத்திரி விழா 22 ஆம் தேதி முதல் துவங்கி அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வரை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 22 ஆம் தேதி நவராத்திரி முதல் நாள் நிகழ்ச்சி சிறப்பாக துவங்கியது. தினசரி காலை சிறப்பு வேள்வியும் ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் ஸ்ரீ மானசாதேவி திருமேனிகளுக்கு சிறப்பு வழிபாடும் தினமும் மாலை அம்பாலின் 9 அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக ஒன்பது நாட்களிலும் ஒன்பது அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து இன்னிசை கச்சேரியுடன் மகா ஆரத்தி சிறப்பு அன்னதானம் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் நிகழ்ச்சியில் சேஷ கலா இசைமணி, நாதஸ்வர வித்வான் அப்பு குழுவினரின் சிறப்பு நாதஸ்வர கச்சேரி, 23ஆம் தேதி நவராத்திரி இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
நவராத்திரி மூன்றாம் நாள் நிகழ்ச்சியான இன்று மாலை சியாமளா கணேஷ் அவர்களின், இன்னிசை நிகழ்ச்சியும்
25ஆம் தேதி அதுல்யா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் ,
26 ஆம் தேதி அஸ்வின் அருள் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும்
27ஆம் தேதி அஸ்வினி மற்றும் நந்தினி அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும்,
28 ஆம் தேதி ஸ்ரீ கலா ரத்னா நாட்டியாலயா வழங்கும் சிறப்பு பரதநாட்டியம் நிகழ்ச்சியும், 29ஆம் தேதி ஓதுவார் குமாரசாமி குழுவினரின் தேவாரம் இன்னிசை நிகழ்ச்சியும்
30 ஆம் தேதி சேஷ சிந்தாமணி சேது கணேஷ் குழுவினரின் வீணை நிகழ்ச்சியும்,
அக்டோபர் 1ம் தேதி துர்க்காதேவி நாட்டிய பள்ளி மாணவர்களின் சிறப்பு பரதநாட்டியம் நிகழ்ச்சியும்
2ம் தேதி விஷ்ணு பிரியா அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
மேலும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு மகா சண்டி ஹோமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.
நவராத்திரி நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு வழங்கிய சிறப்பு அன்னதான பிரசாதம்




